Monday, 13th May 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
குமாரபாளையம்: நாமக்கல் மாவட்டத்தில் மக்கள் கல்வி நிறுவனம் மத்திய அரசின் கீழ் செயல்பட்டு வருகிறது.
இந்த நிறுவனத்தின் மூலமாக குமாரபாளையத்தில் தூய்மை இந்தியா விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு மக்கள் கல்வி நிறுவன இயக்குனர் S.சரவணன் தலைமை தாங்கினார். மக்கள் கல்வி நிறுவனப் பயிற்றுநர் A.மாலதி வரவேற்புரை ஆற்றினார்.
சிறப்பு அழைப்பாளர்களாக, 28-வது வார்டு நகர்மன்ற உறுப்பினர் R.அம்பிகா ராதாகிருஷ்ணன், 32-வதுவார்டு பிரதிநிதி RP.ராஜமாணிக்கம் ஆகியோர் சிறப்புரை ஆற்றினர்.
மேலும், மக்கள் கல்வி நிறுவனக் கணக்காளர் S.சக்திவேல் பிளாஸ்டிக்கின் தீமைகள் பற்றி மக்களுக்கு புரியும் வகையில் விளக்கவுரை ஆற்றினார்.
மேலும் இந்நிகழ்ச்சியில் 2022-2023 ஆம் ஆண்டு பயிற்சி முடித்த பயனாளிகளுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.
மக்கள் கல்வி நிறுவனப் பயிற்றுநர் S.கௌதமி நன்றியுரை கூறினார்.
மேலும் இந்நிகழ்ச்சியில் பயனாளிகள் 60-க்கு மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்ச்சியை மக்கள் கல்வி நிறுவன கற்பிப்பாளார்கள், மக்கள் கல்வி நிறுவன பணியாளர்கள் நிகழ்ச்சி ஏற்பாடுகளை செய்து இருந்தனர்.